/* */

நாமக்கல் மாவட்டத்தில் 3 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட 3 வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 3 புதிய வாக்குச்சாவடிகள்  அமைக்கப்படும்: கலெக்டர்
X

கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சியினர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வாக்குச்சாவடிகளை பிரித்தல் மற்றும் மாற்றி அமைத்தல் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:

மாவட்டத்திலுள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் மொத்த உள்ள 1,623 வாக்கு சாவடிகளில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளை பிரித்து 3 புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகிறது. மேலும், பழுதடைந்த வாக்குசாவடி கட்டிடங்களுக்கு பதில் வேறு இடங்கள் தேர்வு செய்யப்படும். 6 சட்டசபை தொகுதியிலும் 11 வாக்குசாவடிகள் கட்டிட மாற்றம், அமைவிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

இராசிபுரம் சட்டசபை தொகுதியில் சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் தொகுதியில் நாமக்கல் வடக்கு நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருச்செங்கோடு தொகுதியில் ஒக்கிலிப்பட்டி ஊரக சமுதாய சேவை மைய கட்டிடம் ஆகிய 3 வாக்குசாவடிகள் 1,500 வாக்காளர்களுக்கு மேல் இருப்பதால் பிரித்து புதிதாக வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் டிஆர்ஓ துர்காமூர்த்தி, நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா, திருச்செங்கோடு ஆர்டிஓ இளவரசி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிப்பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 29 Sep 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது