/* */

நாமக்கல்லில் வீட்டிற்கு வெள்ளை அடித்த புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி பலி

நாமக்கல்லில் வீட்டுக்கு வெள்ளை அடித்த புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வீட்டிற்கு வெள்ளை அடித்த புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி பலி
X

பைல் படம்

நாமக்கல் பிடில் முத்து தெருவை சேர்ந்தவர் சாதிக்பாட்ஷா. இவருடைய மகன் அப்பாஸ் (22), இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்தார்.

அப்பாஸூக்கும், ஆயிஷா என்பவருக்கும் கடந்த 6 மாதம் முன்பு திருணம் நடைபெற்றது. பிடில் முத்து தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்த அவர்கள், வேறு பகுதியில் குடியேற முடிவு செய்தனர்.

எனவே அவர்கள் குடியிருந்து வந்த வாடகை வீட்டை சுத்தம் செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்க முடிவு செய்த அப்பாஸ், வீட்டின் சுவற்றுக்கு வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது சுவற்றில் இருந்த மின்சார ஒயரில் இருந்து திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த அப்பாசுக்கு ஆயிஷா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Aug 2021 2:15 AM GMT

Related News