நாமக்கல்: காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்கள் ரூ.9 லட்சத்துக்கு ஏலம்
நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் துறையில் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்கள் ரூ.9 லட்சத்திற்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டன.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் துறையில் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்கள் ரூ.9 லட்சத்திற்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில், போலீஸ் துறையில் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்கள், எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி உத்தரவின் பேரில், ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட்டது. ஏடிஎஸ்பி. மணிமாறன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஆயுதப்படை டிஎஸ்பி இளங்கோவன், அரசு ஆட்டோமொபைல் துறை இன்ஜினியர் தேவிபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏலத்தில், 16 டூ வீலர்கள், ரூ.2 லட்சத்து, 50 ஆயிரத்து, 500 க்கும், 7 நான்கு சக்கர வாகனங்கள் ரூ. 5 லட்சத்து, 30 ஆயிரத்து 700க்கும் என, மொத்தம் ரூ. 7 லட்சத்து 81 ஆயிரத்து 200க்கு ஏலம் போனது. இந்த வாகனங்களில், டூ வீலர்களுக்கு 12 சதவீதம், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் என, மொத்தம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 586 ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து, மொத்தம் ரூ. 9 லட்சத்து 786 வசூல் செய்யப்பட்டு வாகனங்கள் டெலிவரி செய்யப்பட்டது.