/* */

கோடையில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நாமக்கல் நகராட்சி வேண்டுகோள்

கோடை காலத்தில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நாமக்கல் நகரட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

கோடையில் பொதுமக்கள் குடிநீரை  சிக்கனமாக பயன்படுத்த நாமக்கல் நகராட்சி வேண்டுகோள்
X

பைல் படம்

கோடை காலத்தில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நாமக்கல் நகரட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களின், குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றை நீர் ஆதராமாகக் கொண்டு 2 குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது. மோகனூர் மற்றும் ஜேடர்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்கள் மூலம், தினசரி 19 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டு நகராட்சிப் பகுதியில் உள்ள 20 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தற்சமயம் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரைக்கொண்டு, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நாமக்கல் நகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தற்போது கோடை காலம் என்பதால் பொது மக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 6 April 2024 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  2. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  6. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  9. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...
  10. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?