/* */

பக்ரீத்: நாமக்கல்லில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

பக்ரீத்: நாமக்கல்லில் இஸ்லாமியர்கள்   சிறப்புத் தொழுகை
X

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் ஈக்தா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத்தொழுகையில், திரளான இஸ்லாமியர் கலந்துகொண்டனர்.

முஸ்லீம்களின் தியாகத் திருநாளான, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் பேட்டை இஸ்லாமிய ஜாமியா பள்ளி வாசல் சார்பில், சிறப்புத் தொழுகை, நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள ஈக்தா மைதானத்தில் நடைபெற்றது. பள்ளி வாசல் முத்தவள்ளி தவுலத்கான் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இமாம் சாதிக் அஷ்ரத் நடத்திய சிறப்பு தொழுகையில் 1000-த்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

கொரணா நோய்த்தொற்று அச்சம் காரணமாக சிறப்பு தொழுகையில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து, கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து பங்கேற்றனர்.

இதேபோல், நாமக்கல் கோட்டையில் உள்ள திப்புசுல்தான் ஜாமிதயா மஸ்ஜித் உள்ளிட்ட, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல் மற்றும் ஈத்கா மைதானங்கள் என 60 இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 July 2021 4:52 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?