/* */

நாமக்கல்லை அச்சுறுத்தும் கொரோனா - ஒரே நாளில் 801 பேருக்கு பதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில், நேற்று ஒரேநாளில் 801 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,005 ஆக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லை அச்சுறுத்தும் கொரோனா - ஒரே நாளில் 801 பேருக்கு பதிப்பு
X

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட அனைவரும், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பெருந்துறை, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில்உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,816 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 27,023 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 7,512 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று 10 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை, 281 ஆக உயர்ந்துள்ளது.

Updated On: 4 Jun 2021 2:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?