நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்: திரளான பக்தர்கள் தரிசனம்.
Muthangi Alangaram-2021ம் ஆண்டு இறுதி நாளை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது.
HIGHLIGHTS
Muthangi Alangaram-2021ம் ஆண்டு இறுதி நாளை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது.
நாமக்கல் நகரில் உள்ள புரான சிறப்பு பெற்ற ஆஞ்சநேயருக்கு தினசரி காலை வடை மாலை அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெறும். தொடர்ந்து பால், தயிர், நெய், நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிசேகம் நடைபெறும்.
அபிஷேகம் நிறைவு பெற்று, மதியம் 1 மணிக்கு தங்கக் கவசம், வெள்ளிக்கவசம், மலர் அங்கி, முத்தங்கி உள்ளிட்ட அலங்கராம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். டிச.31ம் தேதி 2021ம் ஆண்டின் இறுதி நாளை முன்னிட்டு கட்டளைதாரர் மூலம் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தூய முத்துக்களால் தயாரிக்கப்பட்ட முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2