/* */

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மல்டி பாராமீட்டர் கருவிகள்: கோழிப்பண்ணையாளர் சங்கம் வழங்கல்

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மல்டிபாரா மீட்டர் கருவிகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மல்டி பாராமீட்டர் கருவிகள்:   கோழிப்பண்ணையாளர் சங்கம் வழங்கல்
X

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் மல்டி பாராமீட்டர் கருவிகளை சங்க தலைவர் சிங்கராஜ், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் வழங்கினார். அருகில் கலெக்டர் மெகராஜ், எம்.பி. சின்ராஜ், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர்.

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மல்டிபாரா மீட்டு கருவிகள் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தெற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான 5 மல்டிபாரா மீட்டர் கருவிகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தனிடம், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் சிங்கராஜ் வழங்கினார். நாமக்கல் எம்.பி.சின்ராஜ், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Jun 2021 9:36 AM GMT

Related News