Begin typing your search above and press return to search.
பரமத்திவேலூரில் மொபட் மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு
பரமத்தி வேலூரில் டூ வீலர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
பரமத்திவேலூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சையது கவுஸ் (62). கூலி தொழிலாளி. இவர் கடந்த மாதம் 25-ந் தேதி பரமத்திவேலூர் நான்கு ரோட்டில் இருந்து பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த மொபட் ஒன்று அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சையது கவுஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய மொபட்டில் வந்த, பரமத்திவேலூர் கிழக்கு தெருவை சேர்ந்த ரவி (48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.