Begin typing your search above and press return to search.
நாமக்கல் மெயின் ரோட்டில் மெகா பள்ளம்: விபத்து ஏற்படும் அபாயம்
நாமக்கல் மெயின் ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் பஸ் நிலையம் அருகில், மெயின் ரோட்டில், செங்கழநீர் பிள்ளையார் கோயில் அருகில், பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. நகராட்சி குடிநீர் விநியோகத்திற்காக போடப்பட்டுள்ள குழாய் பகுதியை மூடாமல் உள்ளதால், இந்த பள்ளம் மேலும் பெரிதாகி வருகிறது.
இரவு பகல் 24 மணி நேரமும், இந்த இடத்தில் அதிகமான வாகன போக்குவரத்து இருக்கும். மெயின் ரோட்டின் நடுப்பகுதியில் ஏற்பட்டுள்ள, இந்த பள்ளத்தில் விழாமல் தவிர்ப்பதற்காக டூ வீலர்களில் வருபவர்கள் நடுரோட்டில் செல்வேண்டிய நிலை உருவாகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே விபத்து ஏற்படும் முன்பு, நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் அந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.