/* */

திருமண ஆசை காட்டி பெண் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

திருமண ஆசை காட்டி பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நாமக்கல் கோர்ட் தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

திருமண ஆசை காட்டி பெண் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
X

நாமக்கல் அடுத்த போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி (39). அவர், அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். அவரது சூளையில், விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் (25) என்பவர், 2016ம் ஆண்டு குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

அப்போது, செங்கல் சூளை உரிமையாளரின் மகளை, திருமண ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக எருமப்பட்டி போலீசில் ராமசாமி புகார் செய்தார். சக்திவேல் மற்றும் சூளையில் வேலை செய்து வந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த முருகன் (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு, நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சக்திவேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகனை விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டது.

Updated On: 2 Nov 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  4. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  8. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...