/* */

திமுகவிடமிருந்து காங்கிரசை தனிமைப்படுத்தவேண்டும்: விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர்

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரசை தனிமைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு பொதுச்செயலாளர் பாண்டியன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

திமுகவிடமிருந்து காங்கிரசை தனிமைப்படுத்தவேண்டும்: விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர்
X

கர்நாடகாவில் மேகாதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் முதல் மோகதாது வரை செல்லும் விவசாயிகள் பேரணி நாமக்கல் வந்தடைந்தது.

மேகதாது பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக செயல்படும், காங்கிரஸ் கட்சியை, திமுக கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டு தனிமைப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு பொதுச்செயலாளர் பாண்டியன், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூர் முதல், கர்நாடகா மாநிலம் மேகதாது வரை வரை விழிப்புணர்வுப் பேரணி மற்றும் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக, நூற்றுக்கணக்கான விவசாயிகள், காவிரி விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் பேரணியாக செல்கின்றனர். இந்த குழுவினர் நாமக்கல் வந்தனர். நாமக்கல் அண்ணைõ சிலையில் இருந்து பரமத்திரோடு சந்ததிப்பு வரை பேரணியாக அவர்கள் வந்தனர்.

பின்னர். குழுவின் பொதுச்செலயாளர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்துக்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. காங்கிரசார் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்கின்றனர். ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி இதற்கு பதிலளிக்காமல் மவுனமாக உள்ளார். தமிழகத்துக்கு எதிராக உள்ள காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த வேண்டும். கூட்டணியில் இருந்து உடனடியாக அக்கட்சியை திமுக வெளியேற்ற வேண்டும்.

இந்தப் பேரணி ஓசூர் வழியாக மேகதாதுவை சென்றடைந்தவுடன், அங்கு கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுக்க உள்ளோம். ஆறுகளில் மணல் கொள்ளை, வரம்புமீறி மணல் அள்ளப்படுவது, வெளி மாநிலங்களுக்கு கடத்தல் உள்ளிட்டவற்றை அடியோடு எதிர்க்கிறோம். அதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் மணலுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து, அரசே பொதுமக்களுக்கு நேரடியாக மணலை விநியோகம் செய்ய வேண்டும். மணல் கொள்ளையில் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சத்தை போக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும என்று கூறினார். விவசாய முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பேரணியில் கலந்துகொண்டனர்.

Updated On: 19 Jan 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  3. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  4. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  5. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  7. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  8. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  9. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  10. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி