/* */

டேராடூன் இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

Namakkal news - டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

டேராடூன் இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் சேர  விண்ணப்பிக்க அழைப்பு
X

Namakkal news, Namakkal news today- டேராடூன் இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் (கோப்பு படம்)

Namakkal news, Namakkal news today- இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில், ஜீலை 2024 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான, தகுதித்தேர்வு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ராணுவ கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது, அதாவது 1.7.2024-ல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, அல்லது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் 2.7.2011 -க்கும் 1.1.2013-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

விளக்கவுரை மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட, தேர்வுகளின் கேள்வித்தாள்களை கட்டணம் செலுத்தி எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம் மற்றும் www.rimc.gov.in என்ற வெப்சைட் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். முகவரி ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளில் எழுதியிருத்தில் வேண்டும். கட்டணம் ரூ. 200க்கு, The Commandant RIMC, Dehradun என்ற பெயில், State Bank of India, Tel Bhavan, Dehradun (Bank Code – 01576), Uttarakhand மாற்றத்தக்க வங்கி டிமாண்ட் டிராப்ட் பெற்று, THE COMMANDANT, RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, DEHRADUN CANTONMENT, DEHRADUN – 248 003, UTTARAKHAND STATE என்ற முகவரிக்கு, தனி நபர் விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். தனியாக அச்சடிக்கப்பட்ட அல்லது நகல் எடுக்கப்பட்ட விண்ணப்ஙகள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினர்கள் விரைவுத் தபாலில் பெற ரூ. 600-ம், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ.555-ம், ஜாதிச்சான்றுடன் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்படிவம், பிற விவரங்கள் மற்றும் முந்தைய ஆண்டுத் தேர்வுகளின் விடைத்தாள்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

டேராடூனிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு இரட்டை பிரதிகளில், CONTROLLER OF EXAMINATIONS, TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION, CHENNAI – 600 003. என்ற முகவரியில் 15.10.2023 அன்று 5.45 மணிக்குள் சென்று சேரத்தக்க வகையில் அனுப்பிவைத்தல் வேண்டும். வரும் டிச. 2ம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத இயலும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த அரியவாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ராணுவ கல்லூரியில் சேர்க்கை பெறலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-233079 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என, ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Sep 2023 7:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  2. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  3. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  4. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  7. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  8. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  9. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  10. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...