/* */

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் உயர்வு: நாமக்கல் கலெக்டருக்கு முதல்வர் விருது

நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு மாநில அளவில் மூன்றாம் பரிசிற்கான விருது மற்றும் வெண்கலப் பதக்கம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.

HIGHLIGHTS

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் உயர்வு: நாமக்கல் கலெக்டருக்கு முதல்வர் விருது
X

நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்திட சிறப்பாக செயல்பட்ட கலெக்டர் ஸ்ரயோசிங்கிற்கு வெண்கலப்பதக்கம் வழங்கிய முதல்வர்.

சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில், பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்திட சிறப்பாக செயலாற்றியமைக்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு மாநில அளவில் மூன்றாம் பரிசிற்கான விருது மற்றும் வெண்கலப் பதக்கம் வழங்கி பாராட்டினார்.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சென்னையில் நடைபெற்ற, சர்வதேச மகளிர் தின விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார். பெண் இனம் தழைத்திடும் வகையில் பெண் குழந்தைகளின் பிறப்பு, பாலின விகிதத்தை உயர்த்திட சிறப்பாக செயலாற்றியமைக்காக சிறந்த மாவட்ட கலெக்டருக்கான மூன்றாம் பரிசிற்கான விருதினை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கிற்கு வெண்கலப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை தமிழக முதல்வர் ஸ்டாலலின் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதத்தை அதிகரித்தல், மாவட்ட அளவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பினை குறைத்தல், மாவட்டத்தின் கருக்கலைப்பு விகிதத்தினை குறைத்தல், 1994ஆம் ஆண்டைய முன் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை நுட்பங்கள் சட்டத்தை, மாவட்டத்தில் வலுவாக செயல்படுத்தப்பட்டு ஸ்கேன் பரிசோதனை மையங்கள் தொடர் கண்காணிப்பில் இருத்தல், மாவட்டத்தில் உயர்பிறப்பு விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல், பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களில் அதிக அளவு பயனாளிகளை பயன்பெற செய்தல், மாவட்ட அளவில் பெண் சிசு கொலையை தடுத்து பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலையினை ஏற்படுத்துதல், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏதும் நிகழாமல் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு, நாமக்கல் மாவட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்தி சிறப்பாக செயலாற்றியமைக்காக நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் 3ம் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்திட சிறப்பாக செயலாற்றியமைக்காக சிறந்த கலெக்டருக்கான மூன்றாம் பரிசிளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கிற்கு வழங்கினார்.

Updated On: 8 March 2023 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...