நாமக்கல்லில் இலவச கண் சிகிச்சை முகாமை எம்.எல்.ஏ. ராமலிங்கம் துவக்கி வைப்பு
நாமக்கல்லில் இலவச கண் சிகிச்சை முகாமை எம்.எல்.ஏ. ராமலிங்கம் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மெட்ரோ அரிமா சங்கம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அரிமா சங்க தலைவர் டாக்டர் எழிலரசு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மருத்துவக்குழுவினர் முகாமில் கலந்துகொண்டு கண் நோயாளிளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார்கள். கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் தனி பஸ் மூலம் மதுரை அழைத்துச்செல்லப்பட்டனர். ரெப்கோ பேங்க் இயக்குனர் தங்கராசு, தொழில் அதிபர்கள் சுப்ரமணியம், லோகநாதன், நெடுஞ்சாலைத்துறை மேலாளர் சதீஷ், முன்னாள் தலைவர்கள் நாகரத்தினம், வெங்காடசலம், சங்க செயாலளர்கள் ந டராஜன், ராஜ்குமார், பொருளாளர் தினேஷ், ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், பழனிசாமி, தெய்வசிகாமணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.