நாமக்கல்லில் வரும் 23ம் தேதி மஞ்சள் சாகுபடி குறித்த இலவச பயிற்சி
நாமக்கல்லில் வரும் 23ம் தேதி மஞ்சள் சாகுபடி குறிப்புகள் என்ற தலைப்பில் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல்லில் வரும் 23ம் தேதி மஞ்சள் சாகுபடி குறிப்புகள் என்ற தலைப்பில் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில், அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையைத்தில் (கேவிகே), வரும் 23ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மஞ்சள் சாகுபடி குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் மஞ்சள் ரகங்கள். மண் மற்றும் நீர் பரிசோதனையின் முக்கியத்துவம், மண் மற்றும் நீர் மாதிரி சேகரிக்கும் முறைகள், ஊட்டச்சத்து மேலாண்மை, நீர் மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்து தெளிவாக விளக்கி கூறப்படும். இந்த பயிற்சியில், விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம்.
பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என பயிற்சி மையத்தின் தலைவர் டாக்டர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.