விளையாட்டு விடுதிகளில் சேர்க்கைக்கு, நாமக்கல்லில் மாநில அளவிலான தேர்வு
namakkal news, namakkal news today- தமிழக அரசின் விளையாட்டு விடுதிகளில் சேர்க்கைக்கு, மாநில அளவிலான தேர்வு நாமக்கல்லில் நடைபெற்றது.
HIGHLIGHTS
namakkal news, namakkal news today- 2023-2024-ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான, அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு வில்வித்தை மற்றும் வாள்சண்டை பிரிவிற்கான மாநில போட்டிகள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் நாமக்கல், சேலம், விருதுநகர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு, திருவாரூர், சென்னை, ராணிப்பேட்டை, நீல்கிரீஸ், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து 9 வில்வித்தை மாணவர்கள் மற்றும் 49 வாள்சண்டை மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 54 பேர் கலந்து கொண்டனர். இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் எஸ்டிஏடி.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட்டில் விரைவில் வெளியிடப்படும்.
மாநில அளவிலான தேர்வுப் போட்டி ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் , கோகிலா செய்திருந்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கார்த்திகேயன், வில்வித்தை பயிற்சியாளர் ரசிகா, வாள்சண்டை பயிற்சியாளர்கள் பிரபுகுமார், ஜிஜோநிதி, தினேஸ் தேவராஜ், நீச்சல் பயிற்சியாளர் ரகுபதி, ஷட்டில் பயிற்சியாளர் சீனிவாசன் மற்றும் கேலோ இந்தியா மாவட்ட வாலிபால் பயிற்சியாளர் சிங்கு துரை உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.