தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டுகோள்
நாமக்கல் கிழக்கு மவட்ட தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணிகளான இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, மகளிர் தொண்டர் அணி, மகளிர் அணி, பொறியாளர் அணி, விவசாய அணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, ஆதிதிராவிடர் நலக்குழு, விவசாய தொழிலாளர் அணி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, நெசவாளர் அணி, வர்த்தகர் அணி, மீனவர் அணி, மருத்துவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு அணி, சுற்றுச்சூழல் அணி, அமைப்பு சாரா தொழிலாளர் அணி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் அணி போன்ற அணிகளுக்கு மாவட்ட தலைவர் 1, துணைத்தலைவர் 1, அமைப்பாளர் 1, துணை அமைப்பாளர் 5, கிளைக் கழக அமைப்பாளர் 1, துணை அமைப்பாளர் 1, பேரூராட்சி அமைப்பாளர் 1, துணை அமைப்பாளர் 3, பேரூராட்சி வார்டு அமைப்பாளர் 1, துணை அமைப்பாளர்; 2, பாகம் பூத் அளவில் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, அமைப்பாளர் 1, துணை அமைப்பாளர் 2 வீதம் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த பதவிகளுக்கு விருப்பம் உள்ள தி.மு.க.வினர், விருப்பமனு படிவத்தினை நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வருகிற 21ம் தேதி வரை மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், மாவட்ட துணைச் செயலாளர்கள் நலங்கிள்ளி, ராணி, மாவட்ட பொருளாளர் பாலச்சந்தர் ஆகியோரிடம் விண்ணப்ப படிவங்களை பெற்று அதனைப் பூர்த்தி செய்து 21ம் தேதி மாலை 5 மணிக்குள் வழங்கிடவேண்டும்.
மேலும் வயது வரம்பின் காரணமாக இளைஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணிகளுக்கு மட்டும் மாவட்ட அளவில் தலைவர், துணைத் தலைவர் பதவிகள் உருவாக்கப்படவில்லை. இளைஞர் அணிக்கு ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிக்கு 35 வயது என்றும், மாவட்ட இளைஞரணிக்கு 40 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் மருத்துவர் அணி மாவட்ட மற்றும் தொகுதி அளவில் மட்டும் நியமிக்கப்பட உள்ளது. எனவே, தகுதியானவர்கள் அதற்குரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.