மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டம்
மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் மின் ஊழியர்கள்தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் மின்வாரிய பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு 2022ம் ஆண்டின் மின்சார சட்ட திருத்த மசோதாவை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதைக் கண்டித்து இன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய அலுவலர்களும், அலுவலகங்களில் கையொப்பமிட்டு, பணிகளைப் புறக்கணித்து வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களில் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகங்களிலும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.