நாமக்கல் மாவட்டத்தில் வரும் 9ம் தேதி மின் வாரிய நுகர்வோர் குறைதீர் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
இது குறித்து நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் ஆகஸ்ட் மாதத்திற்கான, மின் நுகர்வோர் குறைதீர் முகாம்கள், சம்மந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
வருகின்ற ஆக. 9ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு, பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. 16ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு, திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 19ம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு, பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 23ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு, ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின் நுகர்வேர் குறைதீர் முகாம்கள் நடைபெறுகிறது.
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிகிறார். இந்த முகாமில், பொதுமக்கள் சம்மந்தப்பட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில் நடைபெறும் முகாமில் நேரடியாக கலந்துகொண்டு, மின்வாரியம் குறித்த தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து குறைகளுக்கு தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.