தமிழக அரசைக் கண்டித்து பாஜ சார்பில் பிச்சை அளிக்கும் போராட்டம்..!
தமிழக அரசைக் கண்டித்து பாஜ சார்பில் பிச்சை அளிக்கும் போராட்டம் நாமக்கல்லில் நடந்தது.
HIGHLIGHTS
நாமக்கல் :
நாமக்கல்லில், தமிழ அரசைக் கண்டித்து பாஜக சார்பில், பிச்சை அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில், பட்டியல் இன மக்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை மற்ற திட்டங்களுக்கு செலவிடும், தமிழக அரசைக் கண்டித்து, பிச்சை அளிக்கும் போராட்டம், நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்றது. மாவட்ட பட்டியல் அணி தலைவர் ராஜா போராட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசினார். மாவட்ட பாஜ தலைவர் சத்தியமூர்த்தி ரூ. 1 பிச்சை அளித்து, போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசியதாவது:
மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களின் கீழ், கோடிக்கனக்கான ரூபாயை வழங்கி வருகிறது. தமிழக அரசு மத்திய அரசு குறிப்பிட்ட திட்டங்களுக்காக அந்த தொகையை செலவு செய்யாமல், அவற்றை மாற்றி மாநில அரசின் திட்டங்களுக்கு, அந்த நிதியை பயன்படுத்துகிறது. குறிப்பாக பட்டியல் இண மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை, மாநில திட்டங்களுக்க பயன்படுத்தி வருகிறது. சில நேரங்களில் அந்த நிதியை எந்த திட்டத்திற்கும் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புகிறது. இதனால் தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் பொருளாதா வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அனைவருக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில், இந்தியா முழுவதும் ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு குடிநீர் இணைப்பு வழங்கி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
பட்டியல் அணி நகர தலைவர் கந்தசாமி, நகர பாஜக தலைவர் சரவணன், மாவட்ட பொதுச்செயலாளர் ரவி, தேசிய செயற்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், வர்த்தகர் பிரிவு துணைத்தலைவர் அகிலன், முன்னாள் நகரத்தலைவர் சம்பத்குமார் உள்ளிட்ட திரளான பாஜகவினர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.