பெரியார் பல்கலைக்கழகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பெரியார் பல்கலைக்கழகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
பெரியார் பல்கலைக்கழக தேர்தவில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டதைக் கண்டித்து, நாமக்கல்லில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், முதுகலை வரலாற்றுத்துறை, இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு கடந்த 14 ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது. இது குறித்து பல்வேறு தரப்பினர் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த கேள்வி தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் சாதி ரீதியான கேள்வி இடம் பெற்றுள்ளதை கண்டிப்பதாக கூறி நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் வினாத்தாள்களையும் அவர்கள் எரித்தனர். மேலும் அவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.