Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்களை இடிக்க கலெக்டர் உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்களை இடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 1365 பள்ளிகள் உள்ளன. இவற்றில் ஏற்கனவே ஆய்வு செய்ததில் 80 அரசு மற்றும் அரசு உதவி பெறும், பள்ளி கட்டிடங்கள் பழுதான நிலையில் உள்ளன. அவற்றை இரண்டு வார காலத்திற்குள் இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளை ஆய்வு செய்ய தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கழிவறைகள் பழுதான நிலையில் இருந்தால் உடனடியாக அவைகள் இடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.