/* */

மோகனூரில் சமத்துவ கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

மோகனூர் அருகே சமத்துவ கேக் வெட்டப்பட்டு கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

மோகனூரில் சமத்துவ கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
X

மோகனூர் அருகே ஆர்.சி. பேட்டப்பாளையம் தொடக்கப்பள்ளியில், சமத்துவ கேக் வெட்டப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம், பல புதிய பணிகளைத் துவங்குவதையும், அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் உள்ள ஆர்.சி.பேட்டபாளையம் புனித செசிலி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில், கிறிஸ்துமஸ் மற்றும் இலக்கிய மன்ற விழா கொண்டாடப்பட்டது.

பள்ளித் தாளாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சார்லஸ், மாவட்ட கவுன்சிலர் ருத்ராதேவி, ஊராட்சி தலைவர் குப்பாயி, வார்டு உறுப்பினர் ஆரோன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மாணவர்களைக் கொண்டு, சமத்துவ கேக் வெட்டப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவில், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Updated On: 24 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  2. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  3. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  4. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  9. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு