/* */

நாமக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

நாமக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம்  மோதி  பெண் உயிரிழப்பு
X

நாமக்கல் அருகே உள்ள செல்லப்பம்பட்டி ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி அமுலு (68). கூலித்தொழிலாளி. இவர் நாமக்கல் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், புதன்சந்தை மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமுலுவின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

Updated On: 18 Sep 2022 6:00 AM GMT

Related News