Begin typing your search above and press return to search.
நாமக்கல் அருகே லாரி டயரில் காற்று நிரப்பிய கிளீனர் பலி
நாமக்கல் அருகே லாரி டயரில் காற்றி நிரப்பும் போது ஏற்பட்ட விபத்தில் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் அருகே உள்ள தொட்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (38). லாரி கிளீனர். இவர் சம்பவத்தன்று நாமக்கல் அருகே வள்ளிபுரம் நல்லாயி அம்மன் கோவில் பின்புறம் உள்ள காற்று நிரப்பும் கடை ஒன்றில் லாரி டயரில் காற்று நிரப்பும் பணியில் ஈடுபட்டார். அப்போது லாரி டயரில் பொறுத்தப்பட்டிருந்த டிஸ்க்ரிங் பிடுங்கிக் கொண்டு குமாரின் தலையில் வேகமாக அடித்தது. இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்ச்சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.