/* */

சொத்து வரியை குறைக்கும் வரை அதிமுக தொடர்ந்து போராடும்: முன்னாள் அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் சொத்து வரி குறைக்கப்படும் வரை அதிமுக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

HIGHLIGHTS

சொத்து வரியை குறைக்கும் வரை அதிமுக தொடர்ந்து போராடும்: முன்னாள் அமைச்சர் தங்கமணி
X

சொத்து வரி உயர்வைக்கண்டித்து, நாமக்கல்லில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, அதிமுக சார்பில், மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டது. நாமக்கல் பார்க் ரோட்டில், மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினார்.

அப்போது, அடித்தட்டு மக்களும் பாதிக்கும் வகையில் தமிழக அரசு பல மடங்கு சொத்து வரியை உயர்த்தி உள்ளது. அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, வரியை உயர்த்தாமல் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தினோம். 10 மாத காலத்தில் திமுக அரசு எந்த திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை. சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியதே இந்த ஆட்சியின் சாதனை. மத்திய அரசினை குறை சொல்லி தற்போது சொத்து வரியை உயர்த்தியுள்ளனர். இனி வரும் காலங்களில் மத்திய அரசை காரணம் காட்டி மின்சார கட்டனம், பஸ் கட்டணம் உயரவும் வாய்ப்புள்ளது.

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை மீதான, மாநில வரி குறைக்கப்பட்டு தமிழகத்தை விட பெட்ரோல், டீசல் ஒரு லிட்டருக்க ரூ.10 குறைவாக உள்ளது. குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை ரூ.25 குறைவாக உள்ளது. இதனால் தமிழக வாகன உரிமையாளர்கள் அண்டை மாநிலங்களான பாண்டிச்சேரி, கர்நாடகா பகுதிகளுக்குச் சென்று பெட்ரோல், டீசல் பிடித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசுக்க வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

மத்திய அரசைப் பின்பற்றி, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருக்கலாமே. மாநில அரசு வரியை குறைக்க வேண்டிய நிலையில் மத்திய அரசை குறை கூறுகின்றனர். அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்படுவதால் சொத்து வரி, பெட்ரோல், டீசல் வரியை உடனடியாக குறைக்க வேண்டும். இன்று சட்டசபை தொடர் துவங்குகிறது. இப்பிரச்சினையை சட்டசபையில் அதிமுக எழுப்பும். வரி குறைக்கப்படும் வரை பொதுமக்களுக்காக அதிமுக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.

முன்னாள் எம்எல்ஏக்கள் பாஸ்கர், பென் சரஸ்வரதி, சாந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சராதா, ஆவின் தலைவர் ராஜேந்திரன், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ருத்ராதேவி, முன்னாள் மாவட்ட ஊõரட்சி உறுப்பினர் மயில்சுந்தரம், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் சேகர், முன்னாளர் நகர செயலாளர் ஆட்டோ ராஜா, வைரம் தமிழரசி, சுமதி உள்ளிட்ட திரளான அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 5 April 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?