/* */

கொத்தடிமைகளாக தொழிலாளர்களை நடத்தினால் 3 ஆண்டு சிறை: கலெக்டர் எச்சரிக்கை

கொத்தடிமைகளாக தொழிலாளர்களை நடத்தும் நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை.

HIGHLIGHTS

கொத்தடிமைகளாக தொழிலாளர்களை நடத்தினால் 3 ஆண்டு சிறை: கலெக்டர் எச்சரிக்கை
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்கள் கொத்தடிமை தொழிலாளர்களாக நடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு அதிக அளவிலான புகார்கள் வந்துகொண்டுள்ளன. இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டதில் இந்த மாதத்தில் மட்டும் 8 தொழிலாளர்கள் கொத்தடிமைத் தொழில் முறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். பெறப்படும் புகார் உறுதி செய்யப்பட்டால் அந்த நிறுவன உரிமையாளர் மீது கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டணை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இந்திய தண்டணை சட்டத்தின் கீழ் பெரியோர்களை இப்பணிக்கு அழைத்து வரும் உரிமையாளருக்கு 7 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டணை வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை தொழிலாளர்களை இப்பணிக்கு அழைத்து வரும் உரிமையாளருக்கு வாழ்நாள் சிறை தண்டணையும் வழங்கவும் வழிவகை உள்ளது. எனவே தொழில் நடத்துபவர்கள், முன்பணம் கொடுத்து தொழிலாளர்களை கொத்தடிமை தொழிலாளர்களாக நடத்துவதை தவிர்த்து தண்டணையிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Sep 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்