/* */

சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு

சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு

HIGHLIGHTS

சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
X

பைல் படம் : சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு

நாமக்கல்,

ரோட்டோரம் இருந்த மரத்தில் டூ வீலர் மோதிய விபத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு மாணவர் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் செக்காரப்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்தவர் தரணிதரன் (18). இவர் நாமக்கல் அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார். இவரும் அதே கல்லூரியில் 2ம் ஆண்டு பி.இ. படிக்கும், சேலம் கரூப்பூரைச் சேர்ந்த சதீஷ் (18) மற்றும் குள்ளப்பனூரைச் சேர்ந்த கோகுல் ஆகிய 3 பேரும் நேற்று கல்லூரி மதிய உணவு இடைவேளையின்போது ஒரே மோட்டார் சைக்கிளில் சேலத்தில் இருந்து திருச்செங்கோட்டுக்கு சென்றனர்.

பின்னர், திருச்செங்கோட்டில் இருந்து கல்லூரிக்கு திரும்பியுள்ளனர். மோட்டார் சைக்கிளை மாணவர் கோகுல் ஓட்டி சென்றுள்ளார். திருச்செங்கோடு செம்மாம்பாளையம் அருகே வந்தபோது இடதுபுறம் சென்ற வாகனத்தில் மோதாமல் இருக்க கோகுல் மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், ரோட்டோரம் இருந்த மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கோகுல் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த தரணிதரன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 April 2024 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?