/* */

தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகை திருட்டு

நாமக்கல் அருகே பள்ளி ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகை திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகை திருட்டு
X

கோப்புப்படம் 

நாமக்கல் நல்லிபாளையம் அடுத்த எஸ்.கே.நகரை சேர்ந்தவர் கண்ணன் (45),இவரது மனைவி சசிகலா (28). இவர்கள் இருவரும், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதியருக்கு, பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளார். அவர் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.வி.எஸ்.சி. படித்து வருகிறார். ஆசிரியர் சசிகலா திருப்பதி சென்று விட்டார். அடுந்த நாள் காலை, 8.30 மணிக்கு, ஆசிரியர் கண்ணன் பள்ளிக்கும், அவரது மகள் கல்லூரிக்கும் சென்று விட்டு, மாலை, 6.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பினர். கேட்டை திறந்துபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 15 பவுன் தங்க நகை திருட்டுப்போனது தெரியவந்தது.

இது குறித்து நல்லிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 15 Sep 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...