நாமக்கல்லில் டிச.2ம் தேதி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பட்டினிப்போராட்டம்
108 ஆம்புலன்ஸ் சேவையை, தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என தொழிலாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
HIGHLIGHTS
கோவை மண்டல அளவிலான 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கோவை மண்டலக் குழு உறுப்பினர் முத்துப்பாண்டி உறுதிமொழியை வாசித்தார். மண்டலச் செயலாளர் சிவகுமார், உறுப்பினர் ஜெகதீசன், பொருளாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நாமக்கல், கரூர் மாவட்ட108 தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பணி நீக்கத்தைக் கண்டித்தும், மீண்டும் பணி வழங்கக் கோரியும், ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் தனியார் நிர்வாகத்திற்கு எதிராகவும், வரும் டிச.2ம் தேதி கோவை மண்டல அளவிலான 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நாமக்கல்லில் பட்டினிப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மேலும்,108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.