/* */

ஜே.கே.கே.என் மருந்தியல் கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாட்டம்

ஜே.கே.கே.என் மருந்தியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

ஜே.கே.கே.என் மருந்தியல் கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாட்டம்
X



நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே.கே.கே.என் மருந்தியல் கல்லூரியில் இன்று சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. அதில், சிறப்பு அழைப்பாளராக கல்லூரியின் முன்னாள் மாணவி முனைவர் எம்.பி.பூங்குழலி பங்கேற்று, விழாவை துவக்கி வைத்தார், தற்பொழுது இவர் வேளாளர் கலை அறிவியல் கல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணியாற்றுகிறார். "ஆர்வத்தோடுவாழ்வோம்" என்ற தலைப்பில் பேசினார்.


இவ்விழாவில் முனைவர் எஸ். பாமா வரவேற்புரையாற்றினார். விழாவில் கல்லூரி தாளாளர் ந.செந்தாமரை பங்கேற்று தலைமை உரையாற்றினார். கல்லூரி இயக்குனர் ஓம்சரவணா, ஐஸ்வர்யாலட்சுமி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் ரா.சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இவ்விழாவில் கல்லூரி மாணவிகள் உட்பட பேராசிரியைகளுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழா முடிவில் முனைவர் கரோலின் நிமிழா நன்றி கூறினார்

Updated On: 15 March 2022 2:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்