/* */

விசைத்தறி இயங்க அனுமதி அளிக்க வேண்டும்: நெசவாளர்கள் கோரிக்கை!

வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் விசைத்தறிகளை இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என, பள்ளிபாளையம் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் 30 -ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன கொரோனா முழு ஊரடங்கு காரணமாக, விசைத்தறி தொழிலுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டு தறி பட்டறைகள் இயங்காமல் மூடப்பட்டன. ஒரு மாதத்திற்கு மேலாகியும் விசைத்தறி கூடங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.

இதனால், விசைத்தறி தொழிலில் அடப்பு தறிகூலி நெசவாளர்கள் என சொல்லப்படும் (தறிப்பட்டறையை லீசுக்கு எடுத்து ஓட்டுபவர்கள்) பிரிவைச் சார்ந்த நெசவாளிகள் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நகராட்சி ஆணையாளர் சரவணன் (பொறுப்பு) சந்தித்து, மனு அளித்தனர் .

அந்த மனுவில், தொடர் ஊரடங்கால் அடப்புதறி நெசவாளிகளான நாங்கள் மின்கட்டணம், கட்டிட வாடகை, உள்ளிட்ட பல்வேறு பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். தனிமனித இடைவெளியுடன் தமிழக அரசு விதிக்கும் அனைத்துவிதமான கட்டுப்பாடுகளுடன் இரவு நேரத்தில் மட்டுமாவது விசைத்தறி இயக்கிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.

தறியில் உற்பத்தியாகும் ஜவுளிகள் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் அனுப்பவேண்டிய ரகம் என்பதாலும் இந்த விவகாரத்தில் நகராட்சி ஆணையம் தீர்வு கண்டு பட்டறைகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On: 14 Jun 2021 3:47 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  2. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...
  3. வீடியோ
    Happy Birthday Ajithkumar 🥳🎂 !#ajithkumar #ajith #happybirthday...
  4. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  5. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
  6. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  7. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  10. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி