/* */

கத்திக்குத்து காயமடைந்தவர் உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றம்

குமாரபாளையத்தில் கத்திகுத்து காயமடைந்த நபர் பலியானதால் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கத்திக்குத்து காயமடைந்தவர் உயிரிழந்ததால்    கொலை வழக்காக மாற்றம்
X

குமாரபாளையத்தில் கத்திகுத்து காயமடைந்த நபர் பலியானதால் சம்பந்தப்பட்டவர் மீது கொலை வழக்காக மாற்றம் செய்து பதிவு செய்யப்பட்டது.

குமாரபாளையம் அருகே ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் அருண், 31. கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் பின்னால் உள்ள சிவராஜ், 45, வீட்டிற்கு செப். 27 மாலை 01:30 மணியளவில் அருண் சென்ற போது,அங்கு சிவராஜுடன், கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்த தங்கவேல், 60, என்பவர் சண்டை போட்டுகொண்டு இருந்துள்ளார்.

இதனை அருண் தட்டி கேட்க, ஆத்திரமடைந்த தங்கவேல் கட்டையால் அருண் தலையில் தாக்கியதுடன், கத்தியால் வயிற்றில் குத்தினார். இதனால் படுகாயமடைந்த அருணை அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஈரோடு ஜி.ஹெச்.ல் சேர்த்தனர். தங்கவேல் தலைமறைவானார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலுவை தேடி வந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை 02:30 மணியளவில் ஆனங்கூர் சாலை, மேட்டுக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த தங்கவேலுவை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர். நேற்று காலை 07:00 மணியளவில் கத்திக்குத்தில் காயமடைந்த அருண் இறந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது

Updated On: 30 Sep 2022 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  6. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  7. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...
  8. வீடியோ
    சமூக நீதி சொல்லிட்டு எத்தனை இஸ்லாமியருக்கு சீட் கொடுத்தாங்க ! #seeman...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!