/* */

பள்ளிபாளையம் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவன் உடல் தகனம்

பள்ளிபாளையம் அருகே ஆசிரியை கண்டித்தால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் உடல் தகனம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

பள்ளிபாளையம்  அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவன் உடல் தகனம்
X

மாணவன் ரிதுன்.

பள்ளிபாளையம் அருகே தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. கட்டுமான தொழிலாளியான இவரது மகன் ரிதுன். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சக மாணவியுடன் பேசியதற்காக பள்ளி ஆசிரியை ஒருவர் திட்டியதுடன், பள்ளிக்கு வெளியே நிற்க வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் பள்ளிக்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவரின் உடல் பெருந்துறை ஜி.ஹெச்.ல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

சம்பவத்திற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, மாணவனின் உறவினர்கள் உடலை வாங்க தொடர்ந்து மறுத்து வந்தனர். இந்நிலையில் மாணவன் சாவுக்கு ஆசிரியை, தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவனின் பெற்றோருக்கு நஷ்ட ஈடாக அவனது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய், அவனது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் மாணவனின் உடல் உறவினர்களால் வாங்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Updated On: 28 March 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது