/* */

குமாரபாளையம் அருகே செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் திருவிழா

குமாரபாளையம் அருகே செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் திருவிழா
X

குமாரபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் திருவிழாவில் முப்பாடு வழிபாடு, குதிரை வழிபாடு ஆகியன நடைபெற்றன.

குமாரபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் திருவிழா மார்ச் 29ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றிலிருந்து மேளதாளங்கள் முழங்க, மஞ்சள் ஆடை கட்டி பெண்கள் தீர்தக்குடங்கள் எடுத்து வர, வண்ண மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்துடன் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் அருள்பாலித்தவாறு வந்தனர்.

தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, பொங்கல் வைத்து வழிபட்டனர். முப்பாடு வழிபாடு, குதிரை வழிபாடு ஆகியன நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 8 April 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?