Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்ட தமிழ்த்துறை சார்பில் பேச்சு போட்டி: அரசு கல்லூரி மாணவர் முதலிடம்
Speech Competition -முன்னாள் முதல்வர் பேச்சுப்போட்டியில் குமாரபாளையம் அரசு கல்லூரி மாணவர் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
HIGHLIGHTS
Speech Competition - நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த பேச்சுப்போட்டி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கல்லூரியில் ஜூன் 3 ம் தேதி நடைபெற்றது. இதில் தகுதி பெற்ற 25 மாணவ, மாணவியர் பங்கேற்று பேசினார்கள். இதில் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மோகன்ராஜ் முதலிடம் பிடித்து, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் சான்றிதழ் மற்றும் 5 ஆயிரத்திற்கான காசோலை பெற்று சாதனை படைத்தார். இவரை கல்லூரியின் முதல்வர் ரேணுகா மற்றும் பேராசிரிய பெருமக்கள் பாராட்டினர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2