/* */

வாடகை நிலுவையால் 3 கடைகளுக்கு சீல்: குமாரபாளையம் நகராட்சி அதிரடி

குமாரபாளையத்தில் வாடகை நிலுவையால் நகராட்சி அதிகாரிகள் 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

வாடகை நிலுவையால் 3 கடைகளுக்கு சீல்: குமாரபாளையம் நகராட்சி அதிரடி
X

 வாடகை நிலுவை வைத்த கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள். 

குமாரபாளையத்தில், வாடகை நிலுவையால் நகராட்சி அதிகாரிகள் 3 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதுபற்றி நகராட்சி கமிஷனர் சசிகலா கூறியதாவது: குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 83 கடைகளில் அதிக கடையினர் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்தனர். பலமுறை தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை.

இதனால் சில நாட்கள் முன்பு நகராட்சி அதிகாரிகள் அனைத்து கடையினரிடம் நேரில் சென்று, குறிப்பிட்ட நாட்கள் அவகாசம் கொடுத்து வாடகை செலுத்தாவிட்டால் சீல் வைக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் அதனையும் பொருட்படுத்தாமல் வாடகை செலுத்தாமல் இருந்தனர்.

அதனால் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள 3 கடைகள் சீல் வைக்கப்பட்டன. வாடகை செலுத்தாத கடைகளுக்கு தொடர்ந்து சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் கூறினார். பொறியாளர் ராஜேந்திரன், மேலாளர் சண்முகம், ஆர்.ஐ. கோபால், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 19 March 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது