/* */

ஓட்டுப்பதிவு மெசின்களில் சின்னங்கள், வேட்பாளர் பெயர்கள் பதிவு செய்யும் பணிகள் துவக்கம்

குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு மெசின்களில் சின்னங்கள், வேட்பாளர் பெயர்கள் பதிவு செய்யும் பணிகள் துவக்கப்பட்டன.

HIGHLIGHTS

ஓட்டுப்பதிவு மெசின்களில் சின்னங்கள், வேட்பாளர் பெயர்கள் பதிவு செய்யும் பணிகள் துவக்கம்
X

குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு மெசின்களில் சின்னங்கள், வேட்பாளர் பெயர்கள் பதிவு செய்யும் பணிகள் துவக்கப்பட்டன.

ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, அரசியல் கட்சியினர் பிரசார பணிகளையும், அரசு அதிகாரிகள் தேர்தல் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்வதிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக, ஓட்டுப்பதிவு மெசின்களில் அரசியல் கட்சியினர் சின்னங்கள், வேட்பாளர் பெயர்கள் பதிவு செய்யும் பணிகள் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் துவங்கியது. தாசில்தார் சண்முகவேல், உள்பட பலர் இதற்கான பணிகளை கண்காணித்தனர். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பெரும்பாலோர் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் பகுதியில் தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர். குமாரபாளையம் நகராட்சியில் குறைவான ஓட்டுப்பதிவு நடந்த பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் முருகன், ரெட் கிராஸ் செயலர் ராஜேஷ்கண்ணன், வட்டாட்சியர் சண்முகவேல் உள்பட பலர் பங்கேற்று, வீடு வீடாக சென்று, 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டி, துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்தனர்

இந்த விழிப்புணர்வு பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கியது. குறைவான ஓட்டுப்பதிவு நடத்த பகுதிகளில் நடந்த இந்த பேரணி, மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. வழி நெடுக 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்தவாறு சென்றனர். வருவாய்த்துறையினர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 10 April 2024 1:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  3. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  7. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  10. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...