/* */

தலைவர் சிலைகளை பாதுகாக்கக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

அரசுப்பள்ளியில் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்த முயன்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

HIGHLIGHTS

தலைவர் சிலைகளை பாதுகாக்கக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
X

இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கண்டிப்புதூர் அரசு பள்ளி வளாகப்பகுதியில் சரஸ்வதி சிலை, திருவள்ளுவர் சிலை வைப்பது தொடர்பான பிரச்சனையில் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்த ஒரு சிலர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது சர்ச்சை உருவான நிலையில், இரண்டு சிலைகளும் அகற்றப்பட்டன.

இந்நிலையில் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்த முயன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ் புலிகள் கட்சி மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் கூட்டமைப்பின் முன்னணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளுவர் சிலையின் மீது தாக்குதல் நடத்த முயன்ற நபர்களை கைது செய்ய வேண்டும்; பள்ளிபாளையம் பகுதியில் உள்ள தேச தலைவர்களின் சிலைகளுக்கு கூண்டு அமைத்து பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

Updated On: 18 Jun 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  2. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  3. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  5. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  6. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  7. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  8. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  9. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  10. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்