/* */

குமாரபாளையத்தில் வேகத்தடை, கழிப்பிடம் திறக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

குமாரபாளையத்தில் வேகத்தடை, கழிப்பிடம் திறக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் வேகத்தடை, கழிப்பிடம் திறக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
X

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் ஜே.கே.கே.வீதி, பொது கழிப்பிடம் பராமரிப்பு செய்யப்படாமல் பூட்டி வைக்கபட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் ஜே.கே.கே.வீதி, பொது கழிப்பிடம் பராமரிப்பு செய்யப்படாமல் பூட்டி வைக்கபட்டுள்ளது. அதிக குடியிருப்புகள் உள்ள இந்த பகுதி மக்கள் இதனால் அவதிப்பட நேரிடுகிறது.

இதில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும். மேலும் கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே 5 சாலைகள் ஒன்று சேரும் இடத்தில் வேகத்தடை இல்லாததால் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

சேலம் சாலை சவுண்டம்மன் கோவில் அருகே 4 சாலை சந்திப்பிலும் விபத்துக்கள் அடிக்கடி நடப்பதால் இங்கும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிரணி அமைப்பாளர் சித்ரா, உஷா, விமலா ஆகியோர் குமாரபாளையம் நகராட்சியில் மனு கொடுத்துள்ளனர்.

Updated On: 27 Aug 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  3. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  6. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  7. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  8. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  9. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  10. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...