Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் பட்டா நிலத்தில் பூங்கா அமைத்த ஊராட்சி நிர்வாகம்
குமாரபாளையம் அருகே பட்டா நிலத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
குமாரபாளையம் அருகே, சேலம் - கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில், தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் சில ஆண்டுகள் முன்பு பூங்கா அமைக்கப்பட்டது. இந்த இடம், தன்னுடைய இடம் என காவல்துறையில் பணியாற்றும் நபர் ஒருவர், உரிய ஆவணங்களுடன் வருவாய்த்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்படி பூங்கா அளவிடும் பணி முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து, வி.ஏ.ஒ. தியாகராஜன் முன்னிலையில் துவங்கியது.
இதுபற்றி முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து கூறியதாவது: இந்த இடத்தின் உரிமையாளர் பல வருடங்களாக வெளியூரில் இருந்ததால், இந்த இடம் குறித்து அவரால் அறிய முடியவில்லை. பல வருடங்களாக இடம் யாரும் பயன்படுத்தப்படாமல் இருந்ததால், அரசு நிலம் என்று எண்ணி பூங்கா அமைக்கப்பட்டது. அரசு வழிகாட்டுதல்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.