Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் நகரமன்ற கூட்ட அரங்கு, தலைவர் அறை சீரமைப்பு பணி தீவிரம்
குமாரபாளையம் நகரமன்ற கூட்ட அரங்கு மற்றும் தலைவர் அறைகளில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
HIGHLIGHTS
குமாரபாளையம் நகர்மன்ற தேர்தலில் 33 வார்டுகளுக்கு 188 பேர் போட்டியிட்ட நிலையில், தி.மு.க. 14, அ.தி.மு.க. 10, சுயேச்சை 9, எனும் விதத்தில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற 33 நகர்மன்ற உறுப்பினர்கள் மார்ச் 2ல் பதவியேற்க உள்ளனர். மார்ச் 4ல் காலையில் நகரமன்ற தலைவர் தேர்தல், மாலையில் நகரமன்ற துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சியினரும் சுயேச்சையினரை சந்தித்து தங்களுக்கு ஆதரவு தர கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கு, நகரமன்ற தலைவர் அறை ஆகியவைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.