/* */

29வது முறை இரத்ததானம் அளித்த குமாரபாளையம் சிவனடியார் திருநாணா சுப்பு

ஆர்வத்துடன் இரத்த தானம் செய்துவரும் குமாரபாளையம் இளைஞர்கள். சுற்று வட்டார பகுதியில் யார் கேட்டாலும் உதவி செய்கின்றனர்.

HIGHLIGHTS

29வது முறை இரத்ததானம் அளித்த குமாரபாளையம் சிவனடியார் திருநாணா சுப்பு
X

என்.சுப்பிரமணி என்ற திருநாணா சுப்பு

குமாரபாளையத்தில் நாராயணன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்.சுப்பிரமணி என்ற திருநாணா சுப்பு. வயது 47, இன்று 29வது தடவையாக இரத்ததானம் அளித்துள்ளார்.

புகைப்பட கலைஞரான இவர் சிவாலய பணிகளில் ஆர்வத்துடன் பங்கெடுத்து தொண்டு செய்வதுண்டு. பல ஊர்களில் உள்ள சிவாலய திருப்பணிகளுக்கு ஆர்வத்துடன் பங்களிப்பை செய்துவருபவர். அத்துடன் சமூகத்திற்கு தன்னால் இயன்ற பணிகளையும் தொடர்ந்து செய்து வருபவர். இரத்ததான இயக்கத்தில் முனைப்பாக செயல்படுவதுடன், கேட்பவர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் நேரடியாக ரத்ததானம் செய்து வருகின்றனர்.

47வது வயதில் 29 வது தடவை இரத்த தானம் செய்ததை பாராட்டிய போது, "எனது நண்பரும் புகைப்பட கலைஞருமான ஈரோட்டை சேர்ந்த மோனிகா சண்முகம் இதுவரை 85 தடவை இரத்த தானம் செய்துள்ளார், இப்படி நிறைய நண்பர்கள் நமது பகுதியில் இரத்த தானம் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். அவர்களுடைய பணி பாராட்டத்தக்கது என்று கூறினார்.

Updated On: 30 Jan 2022 10:16 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!