/* */

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், வாலிபர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு
X
சித்தரிப்பு படம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே, கோழி இறைச்சி கடையில் பணியாற்றி வந்தவர் ஸ்ரீகாந்த், 25. இவரது சொந்த ஊர் ஓசூர் என்று கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான், இந்த கடையில் பணியில் ஸ்ரீகாந்த் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், இரவு 11:00 மணியளவில் வட்டமலை தனியார் கல்லூரி எதிரில், சேலம் -கோவை புறவழிச் சாலையை நடந்து கடந்துள்ளார். அப்போது, சேலம் மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில், ஸ்ரீகாந்த் படுகாயமடைந்து, சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 29 Sep 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  2. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  4. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  5. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  7. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  8. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  10. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?