Begin typing your search above and press return to search.
குமாரபாளையம்: பலத்த காற்றுடன் மழை
கடந்த மார்ச் மாதம் ஆரம்பம் முதலே கோடையின் வெப்பம் சுட்டெரித்தது. இந்நிலையில் கடந்த 10 தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இந்நிலையில் இன்று குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான எம்ஜிஆர் நகர், வட்டமலை, குப்பாண்டபாளையம், சாணார்பாளையம், காவேரி நகர் மற்றும் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள அக்ரஹாரம், ஆண்டிகாடு, ஆவாரங்காடு, சத்யா நகர் மற்றும் ஆவத்தி பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோடையின் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.