/* */

குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் நியமித்து பூஜை துவக்கம்

குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் நியமித்து ஒரு வேளை பூஜை துவக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர்  நியமித்து பூஜை துவக்கம்
X

குமாரபாளையம் அப்புராயர் சத்திரம் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் நியமித்து ஒரு வேளை பூஜை துவக்கப்பட்டது.

குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் நியமித்து ஒரு வேளை பூஜை துவக்கப்பட்டது.

குமாரபாளையம் நகர் பாலக்கரை பகுதியில் பல நூற்றாண்டு பழமையான அப்புராயர் சத்திரம் என்ற இடம் உள்ளது. இங்கு மன்னர் கிருஷ்ணதேவராயர் குதிரைகள் கட்டி, இளைப்பாறி உள்ளார் எனவும், இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில், பல மன்னர்கள் சுவாமியை வணங்கியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. சில நாட்கள் முன்பு இந்த கோவில் வளாகத்தில் தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்த கோவிலை பழமை மாறாமல் இந்து சமய அறநிலைத்துறை பராமரிக்க வேண்டும், வழிபாடு செய்யவரும் பக்தர்களுக்கு உதவிடும் வகையில் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும், தினமும் மூன்று கால பூஜை செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் சபரிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதன் பலனாக தற்போது இந்த கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டு, தினமும் ஒரு கால பூஜை நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த கோவிலில் முன்பு இது சம்பந்தமாக போர்டும் வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Feb 2024 11:39 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!