Begin typing your search above and press return to search.
பவானி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் சாவு; போலீசார் விசாரணை
பவானி அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், பவானி அருகே அந்தியூர், உமாரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் சேரன்,19. இவர் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை 4:30 மணியளவில் தனது பல்சர் பைக்கில் ஓமேட்டுர் சாலையில் சென்று கொண்டிருந்தார். கூலிக்காரன்பாளையம் பகுதி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
ஹெல்மெட் அணியாததால் தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
இது குறித்து பவானி இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.