/* */

பள்ளி பாளையத்தில் கடை ஊழியரை திசை திருப்பி சேலை திருடிய மூதாட்டிகள்

பள்ளிபாளையத்தில் கடை ஊழியரை திசை திருப்பி மூதாட்டிகள் சேலைகள் திருடி சென்றது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

பள்ளி பாளையத்தில் கடை ஊழியரை திசை திருப்பி சேலை திருடிய மூதாட்டிகள்
X

பள்ளிபாளையத்தில் கடை ஊழியரை திசை திருப்பி மூதாட்டிகள் சேலைகள் திருடி சென்ற வீடியோ பதிவு

பள்ளிபாளையம் ஆர்.எஸ். பிரிவில் ஜவுளி கடை வைத்து இருப்பவர் செந்தில்குமார்(வயது 35.) நேற்று உணவு உண்ண சென்ற நிலையில் பெண் ஊழியர் ஒருவர் மட்டுமே இருந்தார். அப்போது அங்கு வந்த 3 மூதாட்டிகள் மற்றும் ஒரு முதியவர் சேலை வாங்க போவதாக கூறினார்கள். பெண் ஊழியரை திசை திருப்பி பேச்சு கொடுத்து, ஒவ்வொரு சேலையை காட்டி விலை என்ன? என கேட்டுக்கொண்டு இருந்தனர்.

அப்போது ஒரு மூதாட்டி அங்கு தேர்வு செய்து வைத்திருந்த 10க்கும் மேற்பட்ட சேலைகளை தன் கால் இடுக்கில் மறைத்துகொண்டுள்ளார். இரண்டு துண்டுகள் மட்டும் வாங்கி கொண்டு அவர்கள் சென்றனர். சேலை எண்ணிக்கை குறைந்ததை கண்ட ஊழியர், உரிமையாளரிடம் கூறி சி.சி.டி.வி. கேமராவில் பதிவானதை பார்த்த போது, அந்த கும்பல் சேலைகளை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் தெரிவிக்க, பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 16 Jun 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?