/* */

குமாரபாளையத்தில் அதிமுக வேட்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர் ஆலோசனை

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அதிமுக வேட்பாளர்களுடன்  முன்னாள் அமைச்சர் ஆலோசனை
X

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பங்கேற்றார்.

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்றார்.

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நகர செயலர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது:- வேட்பாளர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து எடுத்து சொல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்த விதிமுறைகளை பின்பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டும். வீடு மாறியுள்ள வாக்காளர்களை தற்போது இருக்கும் இடத்திற்கு சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

குமாரபாளையத்தில் போட்டியிடும் 33 வார்டு வேட்பாளர்களையும் சந்தித்து ஆலோசனைகள் வழங்கினார். முன்னாள் அமைச்சர் தங்கமணியின் புதல்வரும், தகவல் தொழில் நுட்ப பிரிவு குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளருமான தரணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலர் புருஷோத்தமன், நகர செயலர் சிங்காரவேல், நகர அ.தி.மு.க. துணை செயலர் திருநாவுக்கரசு, பள்ளிபாளையம் அ.தி.மு.க. நிர்வாகி சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 10 Feb 2022 1:15 PM GMT

Related News